நவ. 27- இல் மட்கி உரமாக்குதல் தொழில்நுட்பப் பயிற்சி

நாமக்கல்லில் தாவரக் கழிவுகளை மட்கி உரமாக்கும் தொழில்நுட்பங்கள் குறித்த இலவச பயிற்சி முகாம் வரும் 27ஆம் தேதி நடைபெறுகிறது.

நாமக்கல்லில் தாவரக் கழிவுகளை மட்கி உரமாக்கும் தொழில்நுட்பங்கள் குறித்த இலவச பயிற்சி முகாம் வரும் 27ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத் தலைவர் என். அகிலா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வரும் 27-ஆம் தேதி காலை 9 மணிக்கு தாவரக் கழிவுகளை மட்கி உரமாக்குதல் குறித்த தொழில்நுட்பங்கள் என்ற தலைப்பில் ஒரு நாள் இலவசப் பயிற்சி முகாம் நடைபெறுகிறது.
பயிற்சியில் மண் பரிசோதனையின் முக்கியத்துவங்கள், மண் வள மேம்பாட்டை அதிகரிக்கும் வழிமுறைகள், வேளாண்மையில் வெளிவரும் கழிவுகள் பற்றிய விவரங்கள், தாவரக் கழிவுகளை மட்கி உரமாக்குதல் பற்றிய குறிப்புகள், வேஸ்ட் டீகம்போசர் தயாரிக்கும் முறைகள் குறித்த விரிவான விளக்க உரைகளும் மற்றும் செயல் விளக்கமும் செய்து காண்பிக்கப்படும்.
பயிற்சியில் விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள்
பங்கேற்கலாம்.
விருப்பமுள்ளவர்கள் நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்துக்கு நேரில் வந்தோ அல்லது 04286-266345,  266650 என்ற தொலைபேசி எண் மூலமாகவோ 27-ஆம் தேதி காலை 9 மணிக்குள் பெயரை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.
பயிற்சிக்குப் பதிவு செய்வதில் நாமக்கல் மாவட்ட விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும் பயிற்சிக்கு வரும் விவசாயிகள் தங்களுடைய ஆதார் எண்ணைக் கண்டிப்பாகப் பதிவு செய்ய வேண்டும் எனத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com