கொல்லிமலையில் நாளை திறன் பயிற்சி விழிப்புணர்வு முகாம்

கொல்லிமலையில் வரும் 20-ஆம் தேதி திறன் பயிற்சி விழிப்புணர்வு முகாம் நடைபெறுகிறது.


கொல்லிமலையில் வரும் 20-ஆம் தேதி திறன் பயிற்சி விழிப்புணர்வு முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு. ஆசியா மரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழக அரசால் திறன் பயிற்சி விழிப்புணர்வு மற்றும் சந்தையில் நிலவும் வேலைவாய்ப்புகள் குறித்து கிராமப்புற வேலைநாடுநர்களை சென்றடையும் வகையில், நாமக்கல் மாவட்டத்தின் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
இதன்படி கொல்லிமலை ஊராட்சி ஒன்றிய இளைஞர்களுக்குத் திறன் பயிற்சி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளது. கொல்லிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திறன் பயிற்சி விழிப்புணர்வு முகாம் வரும் 20-ஆம் தேதி காலை 10 மணிக்கு நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தால் நடத்தப்படவுள்ளது. இதில் 5ஆம் வகுப்பு படித்தவர்கள் முதல் பட்டப்படிப்பு வரை கலந்து கொள்ளலாம்.
நாமக்கல் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் மூலம் அழகுக் கலை, தையல் பயிற்சி, பெட் சைட் அசிஸ்டெண்ட், சிசிடிவி கேமரா பொருத்தும் பயிற்சி, கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் பயிற்சி, எலக்ட்ரீசியன், வெல்டர் பயிற்சி, லேத் ஆப்ரேட்டர் பயிற்சி, ஆட்டோ மேட்டிவ் சர்வீஸ் டெக்னீசியன் பயிற்சி மற்றும் ஓட்டுநர் பயிற்சி போன்ற திறன் பயிற்சிகள் இலவசமாக அளிக்கப்படுகின்றன.
இதில் விருப்பப்படுவோர் திறன் பயிற்சியில் சேர்ந்து பயிற்சி பெறலாம். இப் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழும், தொடர்புடைய தனியார் துறைகளில் வேலைவாய்ப்பும் அளிக்கப்படுகின்றன.
மேலும் இப் பயிற்சியின்போது போக்குவரத்து செலவினம், பயிற்சி புத்தகம், எழுது பொருள் புத்தகப் பை போன்றவை இலவசமாக வழங்கப்படுகின்றன. எனவே, இத்திறன் பயிற்சி விழிப்புணர்வு முகாமில் கலந்து கொண்டு திறன் பயிற்சிக்குப் பதிவு செய்து, விரும்பும் பயிற்சியை இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com