நாமக்கல் கிறிஸ்து அரசர் தேவாலயத்தில் திருவிழா தொடக்கம்

நாமக்கல் கிறிஸ்து அரசர் தேவாலய ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.


நாமக்கல் கிறிஸ்து அரசர் தேவாலய ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
முன்னதாக காலையில் திருப்பலி நடந்தது. அதைத் தொடர்ந்து தேவாலயம் முன்பு உள்ள கொடிகம்பத்தில் பங்குதந்தை சேவியர் லாரன்ஸ் கொடியேற்றி வைத்தார். இதில் பங்கு தந்தைகள் ஜான் அல்போன்ஸ், அருள்சுந்தர் மற்றும் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து திங்கள்கிழமை முதல் தினமும் மாலை 6.30 மணிக்கு தேவாலயத்தில் நவநாள் திருப்பலி நடக்கிறது. வரும் 25ஆம் தேதி நிறைவு நாள் அன்று மாலை 6.30 மணிக்கு கிறிஸ்து அரசர் தேர்பவனியும், அன்று இரவு 9.30 மணிக்கு திவ்விய நற்கருணை ஆசீர் மற்றும் கொடி இறக்கம் நிகழ்ச்சியும் நடக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com