நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம், வரும் புதன்கிழமை காலை 11 மணிக்கு நாமக்கல் மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெறவுள்ளது என மாவட்ட பொறுப்பாளர் செ.காந்திசெல்வன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: மாவட்ட அவைத் தலைவர் இரா.உடையவர் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், மாநில, மாவட்டக் கழக நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள், நகர, ஒன்றிய, பேரூர் கழகச் செயலர்கள், மாவட்ட அளவிளான சார்பு அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்.