ஆழ்துளைக் கிணறு அமைக்கக் கோரி மனு

20 நாள்களுக்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர் வருவதால், ஆழ்துளை கிணறு அமைத்துக் கொடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

20 நாள்களுக்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர் வருவதால், ஆழ்துளை கிணறு அமைத்துக் கொடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் பேரூராட்சி, கீழ்முகம் கிராமம் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த பொதுமக்கள், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் மு. ஆசியா மரியத்திடம் திங்கள்கிழமை அளித்த மனு விவரம்:
 அம்பேத்கர் தெருவில் ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகிறோம். இங்கு காவிரி குடிநீர் 20 நாள்களுக்கு ஒரு முறை ஒரு மணி நேரம்தான் விநியோகம் செய்யப்படுகிறது.
 பேரூராட்சி நிர்வாகம் மூலம் விநியோகம் செயய்படும் தண்ணீரும் முறையாக வருவதில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தப் பலனும் இல்லை. இதனால் அம்பேத்கர் தெருவுக்கு தண்ணீர் தடையின்றி கிடைத்திட தனியாக ஆழ்துளைக் கிணறு அமைத்துக்கொடுக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com