நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் நாமக்கல்லில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
இதுகுறித்து நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் எஸ்.காந்திசெல்வன் வெளியிட்டுள்ள அறிக்கை: நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் மாவட்ட அவைத் தலைவர் ரா.உடையவர் தலைமையில் கட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது.
கூட்டத்தில் நகராட்சி, ஒன்றியம், பேரூராட்சி, சார்பு அணிகளின் பணிகள் குறித்தும் மற்றும் கட்சி ஆக்கப்பணிகள் குறித்தும் விவாதிக்கப்படவுள்ளன. எனவே, இக்கூட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், நகராட்சி, ஒன்றியம், பேரூராட்சி செயலர்கள், மாவட்ட அளவிலான சார்பு அணிகளின் அமைப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்.