ராசிபுரம் கூட்டுறவு சங்கத்தில் ரூ.40 லட்சத்துக்கு பருத்தி விற்பனை

ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற

ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பருத்தி ஏலத்தில், ரூ.40 லட்சத்துக்கு பருத்தி மூட்டைகள் ஏலம் போயின.
ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைக் கூடத்தின் (ஆர்.சி.எம்.எஸ்) சார்பில் கவுண்டம்பாளையம் ஏல மையத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது. இதில் ராசிபுரம், புதுப்பாளையம், பட்டணம், வடுகம், பூசாரிபாளையம், காக்காவேரி, சிங்களாந்தபுரம், நத்தமேடு, கண்ணூர்பட்டி, கவுண்டம்பாளையம், சீராப்பள்ளி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த பருத்திகளை ஏலத்துக்கு கொண்டு வந்தனர்.
இதில் ஆர்சிஎச் ரகம் 1,775 மூட்டைகள், டிசிஎச் ரகம் 1,278 மூட்டைகள் என மொத்தம் 2,053 மூட்டைகளை ஏலத்துக்கு கொண்டு வந்திருந்தனர்.
இதில் ஆர்சிஎச் ரகம் குறைந்தபட்சமாக குவிண்டாலுக்கு ரூ.4,699-க்கும் அதிக பட்சமாக ரூ.5,405-க்கும் விற்பனையானது. இதே போல் டிசிஎச் ரகம் குறைந்தபட்சமாக ரூ.5,839-க்கும், அதிக பட்சமாக குவிண்டால் ரூ.6,992-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.40 லட்சத்துக்கு வர்த்தகம் நடைபெற்றது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com