நாமக்கல்

வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி: திமுக செயற்குழுவில் வலியுறுத்தல்

DIN

வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணியில் திமுகவினர் ஈடுபட, நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுவில் வலியுறுத்தப்பட்டது.
நாமக்கல்லில் கிழக்கு மாவட்ட செயற்குழுக் கூட்டம், மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்டப் பொறுப்பாளர் செ.காந்திசெல்வன் தலைமை வகித்தார். கூட்டத்தில், ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியான 45 சிஆர்பிஃஎப் வீரர்களுக்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
தொடர்ந்து, இறுதி வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணியில் அந்தந்த பகுதி நிர்வாகிகள், வாக்குச் சாவடி நிலைய முகவர்கள் ஈடுபட வேண்டும். வரும் 23, 24-ஆம் தேதிகளில் நடைபெறும் சிறப்பு முகாமில், ஏற்கெனவே 01.01.2019 அன்று 18 வயது நிறைந்தவர்களில், தாங்கள் வழங்கிய பெயர்கள் இணைக்கப்பட்டுள்ளதா, இறந்தவர் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும். விடுபட்டவர்களின் விண்ணப்பங்களை அந்தந்த பகுதிக்குள்பட்ட வாக்குச் சாவடி மையங்களில் அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடைத்தாள் காண்பிக்க மறுப்பு: மாணவர் மீது தாக்குதல்!

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

SCROLL FOR NEXT