உயிரிழந்த வீரர்களுக்கு பள்ளி மாணவர்கள் அஞ்சலி

காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் தீவிரவாத தற்கொலைத் தாக்குதலில் உயிரிழந்த இந்திய வீரர்களுக்கு,

காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் தீவிரவாத தற்கொலைத் தாக்குதலில் உயிரிழந்த இந்திய வீரர்களுக்கு, ராசிபுரம் வித்யா நிகேதன் பள்ளி மாணவ, மாணவியர் சார்பில்  செவ்வாய்க்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.
பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வீரர்களின் உருவப் படம், வீரர்களின் தலைக்கவசம், தூப்பாக்கி போன்றவற்றுக்கு மலர்தூவியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தினர். அஞ்சலி நிகழ்ச்சியில்,  வீரர்களுக்கு பள்ளி இயக்குநர் எஸ்.பிரகாஷ்,  முதல்வர் ஸ்ரீபிரவீணா ஆகியோர் தலைமையில் மாணவ, மாணவியர் மெழுகுவர்த்தி ஏந்தியவாறு மலர்களை தூவி மௌன அஞ்சலி செலுத்தினர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com