ராசிபுரத்தில் மாநில யோகாசனப் போட்டி

ராசிபுரம் பகுதியில் உள்ள ஸ்ரீஆஸ்ரம் யோகா பயிற்சி மையம் சார்பில் மாநில அளவிலான யோகாசனப் போட்டி

ராசிபுரம் பகுதியில் உள்ள ஸ்ரீஆஸ்ரம் யோகா பயிற்சி மையம் சார்பில் மாநில அளவிலான யோகாசனப் போட்டி  ஸ்ரீவித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.
இதில்  நாமக்கல், சேலம், ஈரோடு, திருச்சி, பெரம்பலூர், கோவை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 600 - க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். 
இதில் பல்வேறு பிரிவுகளின் கீழ் வயது,  எடை அடிப்படையில் யோகாசனப் போட்டிகள் நடத்தப்பட்டன.  யோகாசனத்தில் முன் வளைதல்,  பின் வளைதல், சமநிலைப்படுத்துதல் உள்ளிட்ட மேலும் பல்வேறு யோகா திறன்களையும் மாணவர்கள் செய்து காட்டினர்.  இதில் பயிற்சியாளர் வி.சரவணன் தலைமையில்,  தனலட்சுமி, ராஜகுமாரி,  கோகிலா, சாந்தி, பிரபு, கிருஷ்ணன், தாமரைச்செல்வன், வெங்கடாசலம், மாணிக்கம் ஆகியோர் நடுவர்களாக இருந்து போட்டியை நடத்தினர். 
இதில் ராஜகுமாரி தலைமையிலான நாமக்கல் மாவட்ட அணி அதிக புள்ளிகளுடன் ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் கோப்பை பெற்று வெற்றி பெற்றது. தனலட்சுமி தலைமையிலான சேலம் மாவட்ட அணி 2-ஆம் இடம் பெற்றனர். மேலும் போட்டியில் பங்கேற்ற வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பை, சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. வெற்றி பெற்றவர்களுக்கு ஸ்ரீவித்யா மந்திர் பள்ளி நிர்வாகிகள் வி.ராமதாஸ், சுந்தரராஜன் ஆகியோர் பரிசுகள், கோப்பைகளை வழங்கினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com