கோரிக்கையை நிறைவேற்றும் கட்சிக்கே வாக்கு

தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக உறுதியளிக்கும் கட்சிக்கே எங்களுடைய வாக்கு என்று,

தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக உறுதியளிக்கும் கட்சிக்கே எங்களுடைய வாக்கு என்று, தமிழ்நாடு திரு.வி.க உடல் உழைப்பு, அமைப்புசாரா மற்றும் பொதுத் தொழிலாளர் நலச் சங்க பொதுசெயலாளர் வை.பாலுசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை: தொழிற்சங்கங்கள் கொடுத்த அனைத்து வகையான கோரிக்கைகளையும் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். அனைத்து வகையான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் சிறக்க வழிவகை செய்ய வேண்டும். பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். நாமக்கல்லில் குளிர்பதனக் கிடங்கு, குடோன் வசதி செய்து கொடுக்க வேண்டும். நகராட்சி நிர்வாகம் உயர்த்திய வரியைக் குறைக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் முன்னிலையில், அனைத்துத் தொழிற்சங்கப் பிரதிநிதிகளும் பங்கேற்கும் குறைதீர் கூட்டத்தை நடத்த வேண்டும். கட்டுமானத் தொழிலுக்குரிய மூலப்பொருள்களின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற உறுதியளிக்கும் அரசியல் கட்சிக்கே எங்களது வாக்கு. அலட்சியம் காட்டினால் அனைத்து அமைப்புகளையும் ஒருங்கிணைத்து இனிவரும் தேர்தல்களில் சுயேச்சையாகப் போட்டியிடுவோம் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com