நாமக்கல்லில், துறை அதிகாரிகளின் செயல்பாடுகளுக்கு எதிராக, 108 ஆம்புலன்ஸ் வாகனத் தொழிலாளர்கள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் பூங்கா சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு அச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் தனபால் தலைமை வகித்தார். கோவை மண்டலத் தலைவர் சுரேஷ்குமார், மாநிலப் பொதுசெயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
108 ஆம்புலன்ஸ் வாகனச் சேவையை பலமுறை நிறுத்தி வைத்தும், தொழிலாளர்களிடம் பாரபட்சம் மற்றும் தரக்குறைவாக நடத்தும் அத்துறை அதிகாரிகளுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. முடிவில் மாவட்டச் செயலாளர் திருநாவுக்கரசு நன்றி கூறினார்.