நாமக்கல் கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் நகராட்சி தொடக்கப் பள்ளிக்கு சேர், டேபிள் மற்றும் உபகரணங்கள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ராசிபுரம் வி.நகர் பகுதியில் உள்ள நகராட்சி தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு நாமக்கல் கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆர்.வினாயகமூர்த்தி தலைமை வகித்தார். சத்துணவுத் திட்ட அமைப்பாளர் சாந்தா வரவேற்றார். கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.எம்.ஷேக்நவீத் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பள்ளிக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு தேவையான பேனா, பென்சில் போன்றவற்றை பள்ளித் தலைமையாசிரியர் ஜெ.விஜயலட்சுமியிடம் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காங்கிரஸ் வர்த்தகப் பிரிவுத் தலைவர் டி.ஆர்.சண்முகம், ராசிபுரம் நகர காங்கிரஸ் தலைவர் ஆர்.முரளி, முன்னாள் மாவட்டத் தலைவர் ஏ.சீனிவாசன், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் அ.மணிகோபால், வெங்கடேஷ், கார்த்தி, உதவித் தலைமையாசிரியை எம்.செல்வகுமாரி உள்ளிட்ட ஆசிரியர்கள், மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.