நாமக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வரும் 28-ஆம் தேதி நடைபெறுகிறது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வரும் 28-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு, மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது. இக் கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் பங்கேற்று, விவசாயம் தொடர்பான பல்வேறு தகவல்களைத் தெரிந்து கொள்வதுடன், நிலப் பிரச்னைகள், பால் தொடர்பான பிரச்னைகள் மற்றும் விவசாயம் தொடர்பான குறைகள் ஏதேனும் இருப்பின் அவற்றைத் தெரிவித்து உரிய நிவாரணம் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.