ராசிபுரம் வட்ட தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்கள் சங்கம் 39-ஆம் ஆண்டு தொடக்க விழா, ஓய்வூதியர்கள் உரிமை நாள் விழா, பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா அண்மையில் நடைபெற்றது.
விழாவில் சங்கத்தின் தலைவர் எஸ். பெரியசாமி தலைமை வகித்தார். ஓய்வு பெற்ற உதவி ஆட்சியர் டி. கிருஷ்ணன் வரவேற்றார். சங்கச் செயலர் இரா. சேரலநாதன் ஆண்டறிக்கை வாசித்தார்.
எஸ்.மாதவன், எஸ்.துரைசாமி, சிங்காரம், கே.விஸ்வநாதன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். ஓய்வுபெற்ற உதவி வணிகவரி அலுவலர் அறிவழகன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசினார்.
சங்கத்தின் வளர்ச்சி பற்றியும் எதிர்கால நடைமுறை பற்றியும் அரங்கண்ணன், ஈஸ்வரன் பழனிசாமி, மு.வசந்தா, ஜே.எம்.ராமசாமி, சந்திரகேசவன், வி.மோகன், செங்கோட்டுவேல், ருக்மாங்கதன் ஆகியோர் பேசினர்.
உயிரிழந்த சங்க நிர்வாகிகள் தலைவர் ந. சின்னுசாமி, ஆசிரியர் சிற்றம்பலம், எஸ்.சுந்தரம் ஆசிரியர் ஆகியோருக்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. செங்கமலை, மகேந்திரன், கந்தசாமி, மணி, சி.ஆறுமுகம், நடேசன் ஆகியோர் பங்கேற்றனர். மணிவண்ணன் தீர்மானங்களை வாசித்தார்.