கந்தம்பாளையம் எஸ்.கே.வி.  பள்ளியில் பொங்கல் விழா

நல்லூர் கந்தம்பாளையம் எஸ்.கே.வி. பள்ளியில் பொங்கல் விழா நடைபெற்றது.

நல்லூர் கந்தம்பாளையம் எஸ்.கே.வி. பள்ளியில் பொங்கல் விழா நடைபெற்றது.
பள்ளியின் தலைவர் ரவி பொங்கல் விழாவுக்குத் தலைமை வகித்தார். பொருளாளர் பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். பள்ளியின் ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் மாணவ, மாணவியர் பொங்கலிட்டு கதிரவனை வழிபட்டனர். பின்னர் தமிழ்ப் பண்பாட்டையும், கலாசாரத்தையும் உணர்த்தும் வகையில் மாணவ, மாணவியர்கள் கலாசார உடை அணிந்து கரகாட்டம், தப்பாட்டம், கும்மியாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளை மாணவ, மாணவியர் நிகழ்த்தினர்.
மேலும் கம்புச்சண்டை, பானை உடைத்தல், கபாடி உள்ளிட்ட வீர விளையாட்டுகளில் மாணவ, மாணவியர் ஈடுபட்டு பொங்கல் பண்டிகையைக் கொண்டாடினர். விழாவில் பள்ளியின் இயக்குநர்கள், முதல்வர், தலைமை ஆசிரியர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com