ஜனவரி 22 மின் தடை

வளையப்பட்டி, சேந்தமங்கலம்
துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் வளையப்பட்டி மற்றும் சேந்தமங்கலம் பகுதிகளில் வரும் செவ்வாய்க்கிழமை  (ஜன.22) காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் வாரிய செயற்பொறியாளர் ஆ.சபாநாயகம் தெரிவித்துள்ளார்.  
மின்தடை பகுதிகள்: வளையப்பட்டி, புதுப்பட்டி, மேட்டுப்பட்டி, வாழவந்தி, ரெட்டையாம்பட்டி, ஜம்புமடை, செவ்வந்திப்பட்டி, குரும்பபட்டி, நல்லூர், திப்பரமகாதேவி, வடுகப்பட்டி, மோகனூர் மற்றும் ஒருவந்தூர். 
சேந்தமங்கலம்,  அக்கியம்பட்டி,  கோனானூர்,  பேராமாவூர், கொண்டமநாயக்கன்பட்டி, வடுகப்பட்டி, முத்துக்காபட்டி,புதுக்கோம்பை, பழையபாளையம், சிவநாயக்கன்பட்டி, லக்கமநாயக்கன்பட்டி,  சாலப்பாளையம் மற்றும் சிவியாம்பாளையம்.
நல்லூர்
பரமத்தி வேலூர் வட்டம், நல்லூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் பராமரிப்பு காரணமாக செவ்வாய்கிழமை (ஜன.22) காலை 9 மணி முதல் பகல் 2 மணிவரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் ராணி தெரிவித்துள்ளார்.
மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்:  நல்லூர், கந்தம்பாளையம், மணியனூர், வைரம்பாளையம், கோலாரம், இராமதேவம், நடந்தை,  பில்லூர்,கூடச்சேரி, அர்த்தனாரிபாளையம், கோதூர்,  திடுமல்கவுண்டம்பாளையம்,  திடுமல், நகப்பாளையம், அழகுகிணத்துப்பாளையம், கொண்டரசம்பாளையம், பெருங்குறிச்சி, சித்தாளந்தூர்,சுள்ளிபாளையம், குன்னமலை, கவுண்டிபாளையம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com