ராசிபுரம் அருகே ஆயில்பட்டி பகுதியில் காவலர்களைத் தாக்கியதாக இருவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
ஆயில்பட்டி உடையார்பாளையம் அருந்ததியர் காலனியைச் சேர்ந்தவர் சத்யா. குடும்ப பிரச்னை காரணமாக ஆயில்பட்டி காவல் நிலையத்தில் தொலைபேசி மூலம் புகார் கூறியதையடுத்து, காவல் நிலைய எழுத்தர் செல்வராஜூ, காவலர் பிரபாகரன் ஆகியோர் விசாரணை நடத்த சம்பவ இடம் சென்றனர். அப்போது அங்கு தகராறில் ஈடுபட்டிருந்த கார்கூடல்பட்டியைச் சேர்ந்த அரசு போக்குவரத்து கழக நடத்துநர் சுரேஷ் (35), பெருமாள் (49) ஆகியோர் காவலர்களைத் தாக்கியுள்ளனர். இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.