100 நாள் வேலை வழங்கக் கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர்.
சேலம் மாவட்டம், வீரபாண்டி ஊராட்சி ஒன்றியம் ஆணைக்குட்டபட்டி ஊராட்சி பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள், தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் 100 நாள்கள் வேலை கேட்டு மனு கொடுக்க வீரபாண்டி அலுவலகம் சென்றனர். அங்கு அலுவலர் இல்லாததால், மனுவை அலுவலகப் பணியாளர்கள் வாங்கவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.