அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு ஊக்கத்தொகை

ஆத்தூர் வட்டாரத்தில் அரசுப் பள்ளிகளில் 8 மற்றும் 9-ஆம் வகுப்புகளில் அதிக மதிப்பெண்கள்

ஆத்தூர் வட்டாரத்தில் அரசுப் பள்ளிகளில் 8 மற்றும் 9-ஆம் வகுப்புகளில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு தனியார் நிறுவனத்தின் சார்பில் புதன்கிழமை ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டாரத்தில் உள்ள பெத்தநாயக்கன்பாளையம், ஆத்தூர், மல்லியகரை, தலைவாசல், வீரனூர், தம்மம்பட்டி, கீரிப்பட்டி மற்றும் ஆத்தூர் சிஎஸ்ஐ பள்ளிகளில் 8 மற்றும் 9-ம் வகுப்பு மாணவியரில் கடந்த ஆண்டு நடந்து முடிந்த பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவியருக்கு தனியார் நிறுவனத்தின் சார்பில் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. 
ஆத்தூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிக்கு ஊக்கத்தொகையை பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் அ.மோகன் வழங்கினார். உடன், தலைமையாசிரியை பிரசன்னவதணி மற்றும் மாணவியின் தந்தை ரவி ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com