சேலம்

கர்நாடகத்தில் இருந்து கேரளம் சென்ற சொகுசு பேருந்தில் தீ

DIN

கர்நாடகத்தில் இருந்து கேரளத்துக்கு சென்ற புதிய சொகுசு பேருந்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.  இதனால், சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கர்நாடகத்தில் உள்ள பெல்காம் பகுதியில் புதிய சொகுசு பேருந்துகளுக்கு நவீன கட்டுமானப் பணிகள் செய்யும் தொழிற்சாலை உள்ளது.  இந்த தொழிற்சாலையில் இருந்து புத்தம் புதிய நவீன படுக்கை வசதி கொண்ட ஐந்து சொகுசு பேருந்துகள் கேரளத்தில் உள்ள கொச்சி பகுதிக்கு புதன்கிழமை கொண்டு சென்றனர்.
ஒரு பேருந்தில் கேரளத்தில் உள்ள கடுங்கமங்கலம் பகுதியைச் சேர்ந்த பேருந்து உரிமையாளர் மணிஷ் (45) மற்றும் அவரது நண்பர்கள் மூன்று பேர் வந்துள்ளனர்.  இந்தப் பேருந்தை சேலம் மாவட்டம், வாழப்பாடி பகுதியைச் சேர்ந்த பேருந்து ஓட்டுநர் மீனாட்சிசுந்தரம் (39) ஓட்டி வந்துள்ளார்.
ஓமலூர் அருகேயுள்ள நரிபள்ளம் பகுதியில் பேருந்து சென்ற போது,  பின்பகுதியில் திடீரென தீப்பற்றிக் கொண்டது.  தீப்பற்றியது தெரியாமல் பேருந்து ஓட்டுநர் நீண்ட தூரம் ஓட்டி வந்த நிலையில்,  மற்ற வாகன ஓட்டிகள் பேருந்தை முந்திச் சென்று பேருந்து எரிவதை  அவருக்கு தெரியப்படுத்தினர்.
இதையடுத்து,  பேருந்தை நிறுத்திய ஓட்டுநர் மற்றும் பேருந்தில் வந்த நான்கு பேரும் பேருந்தை விட்டு வெளியே ஓடினர்.  தகவலின் பேரில், விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீப்பற்றி எரியும் பேருந்து மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயைக் கட்டுப்படுத்தினர்.  சுமார் ஒருமணி நேரம் போரடி தீயை முழுமையாக அணைத்தனர்.  ஆனால், அதற்குள் பேருந்தின் பெரும்பாலான பகுதிகள் எரிந்து சாம்பலாயின.
இந்த விபத்தால் சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  விபத்து காரணமாக யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. இந்த விபத்து குறித்து ஓமலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘உன்ன நினைச்சதும்’.. சித்தி இத்னானி!

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.1,25,000 சம்பளத்தில் இலங்கையில் ஆசிரியர் பயிற்றுநர் வேலை!

‘இஸ்ரேல் தனித்து செயல்படும்’ : நெதன்யாகு பதில்!

எம்.பி. சீட் கொடுக்காததால் கணேசமூர்த்தி தற்கொலையா? வைகோ பதில்

SCROLL FOR NEXT