சேலம் வரலாற்றுச் சங்கம் சார்பில் அஸ்தம்பட்டி சி.எஸ்.ஐ. பாலர் ஞான இல்லத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.
விழாவில், இல்லத்தில் பராமரிக்கப்பட்டு வரும் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு உற்சாகமூட்டும் கதைகளை மனோதத்துவ நிபுணர் அமல்ராஜ் எடுத்துரைத்தார். இல்லக் குழந்தைகளுக்கு கிறிஸ்மஸ் கேக் மற்றும் சோப்பு முதலான அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட்டன.
மேலும், அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. சேலம் வரலாற்றுச்சங்கத் தலைவர் இமானுவேல் ஜெயசிங், பொதுச் செயலாளர் பர்னபாஸ், பொருளாளர் ஞானதாஸ் மற்றும் நிர்வாகிகள் பெஞ்சமின் பிராங்ளின், விஜய் பாபு, பாலகுமார் ஆகியோருடன் சேலம் பாரதி இலக்கிய மன்ற நிர்வாகிகள் ஓய்வு பெற்ற கல்வி அதிகாரி அர்த்தநாரி, பொறியாளர் ராம அருணாசலம்,சந்தான கோபால் ஆகியோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை இல்ல நிர்வாகி ஜோகன்னா குருபாதம் மற்றும்ஆசிரியர்கள் செய்திருந்தனர்.