சேலம் மத்திய சிறைக் கண்காணிப்புப் பிரிவு (விஜிலென்ஸ்) தலைமைக் காவலர் ஜெயக்குமார் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சேலம் மத்திய சிறையில் விஜிலென்ஸ் பிரிவில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த ஜெயக்குமார், வார்டன்களின் செயல்பாடு குறித்த தகவல்களை உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்காமல் மறைத்தது உள்பட பல்வேறு புகார்கள் எழுந்தன.
இதுகுறித்து விசாரணை நடத்திய உயர் அதிகாரிகள், சிறைத்துறை கூடுதல் டிஜிபிக்கு அறிக்கை சமர்ப்பித்தனர். அதன்பேரில் சிறைத்துறை கண்காணிப்புப் பிரிவு தலைமைக் காவலர் ஜெயக்குமார், மாநகரக் காவல் துறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.