தமிழக- கர்நாடக எல்லை அருகே பேருந்துகள் மோதல்: 15 பேர் காயம்

தமிழக - கர்நாடக எல்லை அருகே உள்ள நடுமலை மாதேஸ்வரன் கோயில் அருகே தமிழக பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 15 பேர் காயம் அடைந்தனர்.

தமிழக - கர்நாடக எல்லை அருகே உள்ள நடுமலை மாதேஸ்வரன் கோயில் அருகே தமிழக பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 15 பேர் காயம் அடைந்தனர்.
மேட்டூரிலிருந்து கர்நாடக மாநிலம், மாதேஸ்வரன் மலைக்கு தமிழக அரசு போக்குவரத்துக் கழக பேருந்து புதன்கிழமை காலை சென்று கொண்டிருந்தது. அதேபோல தமிழகத்தைச் சேர்ந்த தனியார் பேருந்து ஒன்றும் கர்நாடக மாநிலம், மாதேஸ்வரன் மலையிலிருந்து மேட்டூர் நோக்கி வந்துகொண்டிருந்தது. இந்த இரு பேருந்துகளும் வனப்பகுதியில் யானைகள் நிறைந்த நடுமலை மாதேஸ்வரன் கோயில் அருகே நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் இரு பேருந்துகளின் முன்  முன்பகுதியும் பலத்த சேதமடைந்தன. விபத்தில் படுகாயமடைந்த  15-க்கும் மேற்பட்டோர் மேட்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com