சன்னியாசிப்பட்டி
சங்ககிரி அருகே உள்ள சன்னியாசிப்பட்டி துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதால் படைவீடு, பச்சாம்பாளையம், சங்ககிரி ரயில் நிலையம், சங்ககிரி மேற்கு, சன்னியாசிப்பட்டி, நாகிசெட்டிபட்டி, ஊஞ்சக்கொரை, தண்ணீர்பந்தல் பாளையம், சின்னாகவுண்டனூர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (நவ.16) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படுகிறது என சங்ககிரி மின்வாரிய செயற்பொறியாளர் கே.பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.