சேலத்திலிருந்து சங்ககிரி வழியாக திருங்செங்கோடு அரசு விழாவில் பங்கேற்கச் சென்ற முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு, சங்ககிரி ஒன்றிய, நகர அ.தி.மு.க. சார்பில் சங்ககிரி பழைய பேருந்து நிலையம் அருகே வெள்ளிக்கிழமை மாலை வரவேற்பு அளிக்கப்பட்டது .
இந்த நிகழ்ச்சிக்கு ஒன்றியச் செயலர் என்.எம்.எஸ். மணி தலைமை வகித்தார். இதில் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.ராஜா, நகரச் செயலர் ஆர்.செல்லப்பன், நகரக் கூட்டுறவு வங்கித்தலைவர் என்.சி.ஆர்.ரத்தினம், முன்னாள் தொகுதி செயலர் வி.ஆர்.ராஜா, நகர மகளிரணி செயலர் எஸ்.மங்கையர்க்கரசி, முன்னாள் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் சாந்தாமணி ராஜா, ஒன்றிய இளைஞர் அணி செயலர் ஏ.நீதிதேவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர் சங்ககிரி வருவாய்த்துறையின் சார்பில் வட்டாட்சியர் சி.ரவிச்சந்திரன் தலைமையில் வருவாய்த்துறையினர் முதல்வரை வரவேற்றனர்.