தம்மம்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை (நவ.18) பாரதி பள்ளியில் இலவச கண்சிகிச்சை முகாம் நடைபெறுகிறது.
கோவை சங்கரா கண் மருத்துவ மையம், சேலம் மாவட்ட பார்வையிழப்புத் தடுப்பு சங்கத்தின் நிதியுதவியுடன் தம்மம்பட்டி நண்பர்கள் குழு மற்றும் வாசவி கிளப் இணைந்த நடத்தும் இலவச கண் சிகிச்சை முகாம் ஞாயிற்றுக்கிழமை தம்மம்பட்டியில் பாரதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் காலை 8 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற உள்ளது. இதில் உரிய சிகிச்சைகளை இலவசமாக பெற்று பயனடையவேண்டி தம்மம்பட்டி நண்பர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் திருச்செல்வன் தெரிவித்துள்ளார்.