கார்த்திகை தீபத் திருவிழா நெருங்கிவருவதையொட்டி ஆத்தூர் பகுதியில் அகல் விளக்குகள் விற்பனை தொடங்கியுள்ளது.
ஆத்தூர் பகுதியில் கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு தேவையான அகல் விளக்குகள் விற்பனைக்கு வந்துள்ளன. திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடுவதைப் போன்று கல்வராயன் மலையில் திருக்கோடி விளக்கு ஏற்றப்படும்.இதனை ஆத்தூர் மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் கண்டு வழிபடுவார்கள்.இதே போல அகல் விளக்குகளை வீட்டு வாசலில் ஏற்றிவைத்து வழிபடுவது வழக்கம். இதனை முன்னிட்டு ஏராளமான அகல் விளக்குகள் பல வடிவங்களில் விற்பனைக்கு வந்துள்ளன.இதனை பொதுமக்கள் வாங்கி செல்கின்றனர்.