அதிமுக 47-ஆம் ஆண்டு தொடக்க விழாவினையொட்டி, அக்கட்சி சார்பில் இளம்பிள்ளை அருகே உள்ள இடங்கணசாலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு பொதுக் கூட்டம் நடைபெற்றது.
சங்ககிரி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் எஸ்.ராஜா இக்கூட்டத்துக்கு தலைமை வகித்து, சங்ககிரி சட்டப்பேரவைத் தொகுதியில் நிறைவேற்றப்பட்டுள்ள பல்வேறு திட்டங்கள் குறித்து விளக்கிப் பேசினார்.
தலைமைக் கழகப் பேச்சாளர் ஈரோடு சுப்பிரமணியம், அதிமுக தொடங்கியது முதல் தற்போது வரை அக்கட்சியின் வளர்ச்சி குறித்து பேசினார். இடங்கணசாலை நகரச் செயலர் அண்ணாமலை முன்னிலை வகித்தார். பேரூராட்சி முன்னாள் தலைவர் சிவலிங்கம் வரவேற்றார்.
நிர்வாகிகள் லோகநாதன், அம்மா பேரவை செயலர் குமரேசன், துணை செயலர் சௌந்தரராஜன், ஒன்றிய அவைத் தலைவர் கோவிந்தன், மகுடஞ்சாவடி தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத் தலைவர் நாகராஜ் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.