பா.ம.க. மாவட்ட செயற்குழுக் கூட்டம்

சேலம் தெற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் செயற்குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை எடப்பாடியில் நடைபெற்றது.

சேலம் தெற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் செயற்குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை எடப்பாடியில் நடைபெற்றது. மாவட்டச் செயலர் வழக்குரைஞர் ந.அண்ணாதுரை தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக மாநிலத் தலைவர் ஜி.கே.மணி கலந்துகொண்டு பேசினார்.
அதில், அண்மையில் அதிகளவில் புதிய உறுப்பினர்களை சேர்த்த நிர்வாகிகளை பாராட்டினார். தொடர்ந்து, வரும் மக்களவைத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் உள்ளிட்ட தேர்தல்களை எதிர்கொள்ளும் வகையில் பா.ம.க. நிர்வாகிகள் எவ்வாறு செயலாற்ற வேண்டும் எனவும், கட்சியின் கட்டமைப்பை உறுதி செய்யவும், தமிழகத்தின் தற்போதை அரசியல் சூழலை மாற்றிடும் நோக்கில் ஒவ்வொரு கிளை அமைப்புகளும் முழுத் திறனுடன் செயல்படவேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து, புதிய பெண் நிர்வாகிகள் அறிமுக நிழ்ச்சியை மாநில துணைச் செயலர் கண்ணையன் தொடக்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாநில இளைஞர் அணி துணைச் செயலர் ரவி, மாவட்ட நிர்வாகிகள் நடேசன், பாலு, ராமர், குமாரசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com