மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு குறைப்பு

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு நொடிக்கு 500 கனஅடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு நொடிக்கு 500 கனஅடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.
காவிரி டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து வருவதால், டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு கடந்த சில தினங்களாக நொடிக்கு 1,000 கனஅடியாகக் குறைக்கப்பட்டது. தற்போது தொடர் மழையின் காரணமாக டெல்டா பாசனத்துக்கு நீர் திறப்பு புதன்கிழமை காலை நொடிக்கு 500 கன அடியாகக் குறைக்கப்பட்டது. கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு  நீர் திறப்பு நொடிக்கு 300 கன அடியிலிருந்து 800 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.  அணைக்கு நொடிக்கு  5,025 கன அடி வீதம் தண்ணீர் வந்துகொண்டிருந்தது. அணையின் நீர்மட்டம் 101.41 அடியாகவும், நீர் இருப்பு 66.68 டி.எம்.சி.யாகவும் இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com