சங்ககிரி வட்டம், தேவூர் அருகே உள்ள கல்வடங்கம் காவிரி ஆற்றில் திங்கள்கிழமை 20 விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டன.
விநாயகர் சதுர்த்தி விழா கடந்த வியாழக்கிழமை கொண்டாடப்பட்டதையடுத்து, காவல் துறையின் சார்பில் சிலைகள் கரைப்பதற்கு திங்கள்கிழமை இறுதி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், எடப்பாடி, தேவூர் பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் 20 சிலைகளை கல்வடங்கம் காவிரி ஆற்றில் விசர்ஜனம் செய்தனர். செப். 13-ஆம் தேதி முதல் செப். 17-ஆம் தேதி வரை 718 விநாயகர் சிலைகள் இந்த ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டுள்ளன.