வேலை வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்

படித்த இளைஞர்களுக்கு மத்திய அரசு வேலை வழங்கக் கோரி, சேலத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

படித்த இளைஞர்களுக்கு மத்திய அரசு வேலை வழங்கக் கோரி, சேலத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
 ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலை வழங்குவோம் என்று கூறிய மோடி தலைமையிலான பாஜக அரசு, ஆண்டுக்கு 2 லட்சம் பேருக்கு கூட வேலை வழங்கவில்லை என்று கூறி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் தொடர்முழக்க ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
 வாலிபர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கந்தசாமி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட இளைஞர்கள் வேலை வழங்கக் கோரி, முழக்கங்கள் எழுப்பினர். மாவட்டச் செயலர் பிரவீன்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 உலகளவில் வேலையில்லா இளைஞர்கள் இந்தியாவில்தான் அதிகளவில் உள்ளனர். வேலை இல்லாத இளைஞர்கள் சமூகத்துக்கு எதிரான செயல்களில் ஈடுபடுகின்றனர். இதை சமூக பிரச்னையாக பார்க்க வேண்டும். மத்திய அரசு துறையில் 24 லட்சம் பணியிடங்களும், மாநில அரசு துறையில் 5 லட்சம் பணியிடங்களும் காலியாக உள்ளன. தொழிற்சாலைகள் இழுத்து மூடும் நிலை ஏற்பட்டுள்ளது என ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com