கோவிலூர் கிராமத்துக்கு தார்ச் சாலை அமைக்கக் கோரிக்கை

ஏற்காடு மாரமங்லம் ஊராட்சி கோவிலுர் கிராமத்துக்கு தார்ச் சாலை வசதி செய்து தரவேண்டி மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஏற்காடு மாரமங்லம் ஊராட்சி கோவிலுர் கிராமத்துக்கு தார்ச் சாலை வசதி செய்து தரவேண்டி மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாமங்கலம் ஊராட்சி கோவிலூர் கிராமத்துக்கு கூத்தமுத்தல் கிராமம் முதல் கோவிலூர் கிராமம் வரை சுமார் 8 கிலோ மீட்டர்  தொலைவுக்கு பல ஆண்டுகாலமாக வனப்பகுதியில் மலைவாழ் மக்கள் நடந்து சென்றுவருவதால் இக் கிராமத்தில் தாழ் கோவிலூர், மேல் கோவிலூர் பகுதியில் சுமார் 300 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.
பள்ளி குழந்தைகள் மேல் படிப்புக்குச் செல்லமுடியாமல் முதியோர்கள் , நோயாளிகள், கர்ப்பிணிகள் நடந்து வரும் சூழ்நிலை உள்ளது. நியாயவிலைக் கடைக்கு மாதந்தோறும் கூத்தமுத்தல் கிராமத்துக்கு வந்து பொருள்களைப் பெற்றுச் செல்கின்றனர். மாவட்ட நிர்வாகத்துக்கு மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com