மேட்டூர் அனல் மின் நிலையத்தில் 2வது அலகில் மின் உற்பத்தி தொடங்கியது

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் இரண்டு பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. முதல் பிரிவில் தலா 210 மெகாவாட் திறன்

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் இரண்டு பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. முதல் பிரிவில் தலா 210 மெகாவாட் திறன் கொண்ட நான்கு அலகுகள் மூலம் 840 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. 
இரண்டாவது பிரிவில் 600 மெகாவாட் திறன் கொண்ட ஒரு அலகு செயல்பட்டு வருகிறது. கடந்த சனிக்கிழமை நிலக்கரி பற்றாக்குறை காரணமாக முதல் பிரில் உள்ள 2வது அலகில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. 
ஞாயிற்றுக்கிழமை மூன்றாவது அலகும் செவ்வாய்க்கிழமை இரண்டாவது பிரிவும் நிறுத்தப்பட்டது. இதனால் மேட்டூர் அனல் மின் நிலையத்தில் 1040 மெகாவாட் மின் உற்பத்தி தடைபட்டது. முதல் பிரிவில் இரண்டாவது அலகில் 5 நாள்களுக்கு பிறகு வியாழக்கிழமை காலை மீண்டும் மின் உற்பத்தி
தொடங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com