வாழப்பாடி அருகே குடிநீர் குழாய் வால்வுகளை திருடிய இருவர் கைது

வாழப்பாடி அருகே சோமம்பட்டியில் குடிநீர் குழாய் உந்து தொட்டியை உடைத்து பித்தளை வால்வுகளை திருடியதாக இருவரை, அப்பகுதி மக்கள் பிடித்து வாழப்பாடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.


வாழப்பாடி அருகே சோமம்பட்டியில் குடிநீர் குழாய் உந்து தொட்டியை உடைத்து பித்தளை வால்வுகளை திருடியதாக இருவரை, அப்பகுதி மக்கள் பிடித்து வாழப்பாடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
வாழப்பாடி - தம்மம்பட்டி சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த இரு இளைஞர்கள், சோமம்பட்டி பிரிவு சாலை அருகே சாலையோரத்திலுள்ள குடிநீர் குழாய் உந்து தொட்டியின் மேல் மூடியை உடைத்து, அதற்குள் இருந்த பித்தளை வால்வுகளை திருடியது தெரியவந்தது.
இதனையடுத்து, இந்த இரு இளைஞர்களையும் பிடித்து சோமம்பட்டி கிராம மக்கள் வாழப்பாடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து சோமம்பட்டி ஊராட்சி செயலாளர் மகேஸ்வரன் மூலம் வட்டார வளர்ச்சி அலுவலர் மாலினிக்கு தகவல் கொடுத்தனர்.
ஊராட்சிக்குச் சொந்தமான குடிநீர் வால்வுகளை திருடி பொதுமக்களிடம் பிடிபட்ட இரு இளைஞர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி, வட்டார வளர்ச்சி அலுவலர் மாலினி வாழப்பாடி போலீஸில் புகார் செய்தார்.
அவரது புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், குடிநீர் வால்வுகளை திருடியபோது பொதுமக்கள் பிடித்து ஒப்படைத்த ஆத்துôர் அடுத்த ராமநாயக்கன்பாளையம் அண்ணாநகர் கிராமத்தைச் சேர்ந்த ராயர் மகன் ரிஷி (30). முத்துசாமி மகன் ஜெயப்பிரகாஷ் (30) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com