கர்நாடக மாநிலம், பெல்லாரியில் உள்ள நீர் மற்றும் மண் மேலாண் பாதுகாப்புப் பயிற்சி நிலையத்துக்கு சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 20 விவசாயிகள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
அங்கு விவசாயம் குறித்து 7 நாள்கள் நடைபெறும் பயிற்சியில் கலந்து கொள்ள சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டனர்.
நிகழ்ச்சியில் உழவர் பயிற்சி நிலைய துணை இயக்குநர் க. சையத் அன்சர் பாஷா கொடி அசைத்துத் துவக்கி வைத்தார். அப்போது வேளாண்மை உதவி இயக்குநர் எஸ். செல்வமணி, வட்டார தொழில்நுட்ப மேலாளர்கள் கே. ராஜேந்திரன், பொ. செல்வகுமார், உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் சி. சரஸ்வதி, தீபன் முத்துசாமி உடனிருந்தனர்.