பண்ணைக் கழிவு மேலாண்மை பயிற்சி

வேப்பநத்தம் ஊராட்சியில் விவசாயிகளுக்குப் பண்ணைக் கழிவு மேலாண்மை பயிற்சி உதவி வேளாண் அலுவலர்

வேப்பநத்தம் ஊராட்சியில் விவசாயிகளுக்குப் பண்ணைக் கழிவு மேலாண்மை பயிற்சி உதவி வேளாண் அலுவலர் கார்த்திக் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தலைவாசல் ஒன்றியத்துக்குள்பட்ட வேப்பநத்தம் ஊராட்சியில் விவசாயிகளுக்கு பண்ணைக் கழிவு மேலாண்மை பயிற்சி உதவி வேளாண்மை அலுவலர் கார்த்திக் தலைமையில் நடைபெற்றது.
இதில், வட்டாரத் தொழில்நுட்ப மேலாளர் ச. பாண்டீஸ்வரன் வரவேற்றார். நிகழ்ச்சியில் 40 விவசாயிகள் கலந்து கொண்டனர். முன்னோடி விவசாயி ராஜேந்திரன், பண்ணைக் கழிவுகளான வைக்கோல், சாணம், இலை, மரப்பட்டைகளைக் கொண்டு உரம் தயாரிக்கும் முறையையும், அந்த உரத்தால் மண்ணுக்கு ஏற்படும் பயன்களையும் விளக்கினார்.
நிகழ்ச்சியில் தந்தை ரோவர் வேளாண் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை உதவி தொழில்நுட்ப மேலாளர்களான க.ரமேஷ், செல்வி பிரியங்கா ஏற்பாடு செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com