மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 23 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

காவிரியின் நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 23 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.

காவிரியின் நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 23 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
கடந்த சில நாள்களாக மேட்டூர் அணைக்கு 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் கனஅடி வரை வந்துகொண்டிருந்த நிலையில் செவ்வாய்க்கிழமை காலை அணைக்கு விநாடிக்கு 5,023 கனஅடி வீதம் வந்தது. மாலையில் 23 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. 
அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 22 ஆயிரம் கனஅடி வீதமும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு நொடிக்கு 800 கனஅடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டிருந்தது. அணையின் நீர் இருப்பு 70.75 டி.எம்.சி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com