சேலத்தில் ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற கட்டடத் தொழிலாளி மீது ரயில் மோதியதில் அவர் உயிரிழந்தார்.
சேலம் மாமாங்கம் பெரியமோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் (58). கட்டடத் தொழிலாளியான இவர், வெள்ளிக்கிழமை மாலை அப்பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தை கடந்துள்ளார். அப்போது, அவ்வழியே வேகமாக வந்த ரயில் அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த கணேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்து வந்த சேலம் ரயில்வே போலீஸ் சிறப்பு எஸ்.ஐ. பாலமுருகன் தலைமையிலான போலீஸார் கணேசனின் உடலை மீட்டனர். இது தொடர்பாக சேலம் ரயில்வே போலீஸார் விசாரித்து வருகின்றனர்.