பெரியார் தொலைநிலைக் கல்வி நிறுவனம் (பிரைடு), பல்கலைக்கழகத் தொழிற்சார் புரிந்துணர்வுத் திட்டத்தின் கீழ் சேர்க்கை பெற்ற மாணவர்களுக்கான தேர்வுகள் மே 15-இல் தொடங்க உள்ளன என்று துணைவேந்தர் பொ.குழந்தைவேல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியது:-
தேர்வு குறித்த விவரங்கள், பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வுக்கு மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பம் செய்வதற்கு ஏப்ரல் 26-ஆம் தேதி இறுதி நாளாகும்.
தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் பல்கலைக்கழக இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன என்றார்.