சேலம்
அரசு மகளிர் கலைக் கல்லூரியில் விளையாட்டு விழா
சேலம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் 40-ஆம் ஆண்டு விளையாட்டு விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
சேலம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் 40-ஆம் ஆண்டு விளையாட்டு விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
சேலம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் நடைபெற்ற இந்த விழாவுக்குக் கல்லூரி முதல்வர் ப. அரங்கநாதன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக சேலம் மாநகர காவல் ஆணையர் கே. சங்கர் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
விழாவில் ஒலிம்பிக் சுடர் ஒளி ஏற்றி அனைவரும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். விழாவில் சிலம்பாட்டம், கராத்தே, ஓடு உடைத்தல், தொடர் ஓட்டம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. மேலும் விழாவில் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
விழாவில் உடற்கல்வி இயக்குநர் பெ. சிவக்குமார், விளையாட்டுத் துறை மாணவர் செயலர் பி. வைத்தீஸ்வரி மற்றும் சர்வதேச தடகள வீரர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.