சேலம் மாவட்டம், ஏற்காடு பிஎஸ்என்எல் ஊழியர்கள் தெருமுனைப் பிரசாரக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க கிளைத் தலைவர் சுப்பிரமணி தலைமை வகித்தார். கிளைச் செயலாளர் இளங்கோ, மாவட்டப் பொருளாளர் பன்னீர்செல்வம், ராஜன் காளியப்பன் முன்னிலை வகித்தனர்.
தெருமுனை பிரசாரக் கூட்டம் ஏற்காடு ஒண்டிக்கடை அண்ணா சிலை மற்றும் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. பிரசாரத்தில் மத்திய அரசு உடனடியாக பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு 4 ஜி அலைக்கற்றை ஒதுக்க வேண்டும், பிப்ரவரி 11-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை பொதுமக்களிடம் பி.எஸ்.என்.எல். நிறுவன சேவை குறித்து பொதுமக்களுக்கு விளக்கி வருவதாகவும் மேலும் துண்டு பிரசுரங்கள் வழங்கி வருகின்றனர்.
பி.எஸ்.என்.எல். பராமரிக்கும் செல்லிடப்பேசி கோபுரங்களில் தனியாருக்குக் கொடுக்கும் முன்மொழிவை கைவிட வேண்டும் என பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி பிப்ரவரி 18-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ளதாகத் தெரிவித்தனர்.