உயிர் நீத்த வீரர்களுக்கு வழக்குரைஞர்கள் சங்கத்தில் அஞ்சலி

ஆத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞர்கள் சங்கத்தின் சார்பில் தலைவர் 

ஆத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞர்கள் சங்கத்தின் சார்பில் தலைவர் டி. வெங்கடேசன் தலைமையில் திங்கள்கிழமை அஞ்சலி செலுத்தினார்கள்.
சேலம் மாவட்டம், ஆத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞர்கள் சங்கத்தின் சார்பில் தலைவர் டி. வெங்கடேசன் தலைமையில் அனைத்து வழக்குரைஞர்களும் மெளன அஞ்சலி செலுத்தினர்.
நிகழ்ச்சியில் மூத்த வழக்குரைஞர்கள் ஆர். ராமூர்த்தி,என். ராமதாஸ், நசீர் முகமது,சிவக்குமார், ஞானசேகரன், ராமசாமி உள்ளிட்ட ஏராளமான வழக்குரைஞர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல் ஆத்தூர் புனித ஜெயராக்கினி ஆலயத்தில் காலை நடைபெற்ற திருப்பலியில் தீவிரவாதத் தாக்குதலில் இறந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு வீர வணக்கமும் கண்ணீர் அஞ்சலியும் ஜெபமும் செய்யப்பட்டது.
கத்தோலிக்க பங்குமக்கள் அனைவரும் பங்குத்தந்தை அருட்திரு கிரிகோரி ராஜன்தலைமையில் மெழுகுவர்த்தியுடன் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com