சேலத்தில் வருகிற பிப்ரவரி 22-ஆம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறுவதாக மாவட்ட அட்சியர் ரோகிணி ராம்தாஸ் தெரிவித்தார்.
சேலத்தில் பிப்ரவரி 2019 மாதத்துக்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் பிப்ரவரி 22-ஆம் தேதி காலை 10.30 மணியளவில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்
நடைபெறவுள்ளது.
எனவே, கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு வேளாண்மை சம்பந்தமான குறைகளை நேரிலும், விண்ணப்பம் மூலமாகவும் தெரிவித்துப் பயனடையலாம் என ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் தெரிவித்தார்.