கூலமேட்டில் வெள்ளிக்கிழமை ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தில் சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தில் வாடிவாசல், பார்வையாளர் மாடம் உள்ளிட்டவற்றை அவர் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது, காவல் கண்காணிப்பாளர் தீபா கணிக்கர், கோட்டாட்சியர் ம.செல்வன், டிஎஸ்பி ஆர்.பொன்கார்த்திக்குமார், வட்டாட்சியர் செல்வம், மண்டலத் துணை வட்டாட்சியர் தமிழ்ச்செல்வன், காவல் ஆய்வாளர்கள் என்.கேசவன், ஆர்.சரவணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.