வாழப்பாடி கிராமங்களில் திமுக கிராம சபை கூட்டம்

சேலம் மாவட்டம், வாழப்பாடி பகுதி கிராமங்களில் திமுக சார்பில் முன்னாள் சட்டப்பேரவை துணைத் தலைவர்

சேலம் மாவட்டம், வாழப்பாடி பகுதி கிராமங்களில் திமுக சார்பில் முன்னாள் சட்டப்பேரவை துணைத் தலைவர் வி.பி. துரைசாமி தலைமையில் திங்கள்கிழமை கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.
சேலம் மாவட்டம், வாழப்பாடி ஒன்றிய திமுக சார்பில், தமிழக சட்டப்பேரவை முன்னாள் துணைத் தலைவர் வி.பி.துரைசாமி தலைமையில் வாழப்பாடியை அடுத்த சந்திரபிள்ளை வலசு, சின்னமநாயக்கன்பாளையம், குறிச்சி, புழுதிக்குட்டை, கோலாத்துக்கோம்பை, நீர்முள்ளிக்குட்டை ஆகிய 6 கிராம ஊராட்சிகளில் திங்கள்கிழமை கிராம சபைக் கூட்டம்
நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் வாழப்பாடி ஒன்றிய திமுக செயலாளர் எஸ்.சி. சக்கரவர்த்தி,  ஏற்காடு தொகுதி சட்டப்பேரவை  முன்னாள் உறுப்பினர் சி.தமிழ்ச்செல்வன் மற்றும் ஒன்றிய திமுக நிர்வாகிகள் சடையன், வையாபுரி, கோவிந்தன், பெரியசாமி, கருணாகரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கிராம சபை கூட்டங்களில், கிராமப்புறங்களில் நிலவும் குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் பற்றாக்குறையைப் போக்க வேண்டுமென பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர். மக்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க தமிழக அரசை வலியுறுத்தி பெற்றுக் கொடுப்பதாக திமுக-வினர் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com