சேலத்தில் விவசாயம், கால்நடை மற்றும் உணவு பதப்படுத்தும் முறை குறித்த இலவசக் கண்காட்சி திங்கள்கிழமை நிறைவடைந்தது.
விவசாயம், கால்நடை மற்றும் உணவு பதப்படுத்தும் முறை குறித்த இலவச கண்காட்சி சனிக்கிழமை தொடங்கி ஜனவரி 19, 20, 21 ஆகிய தேதிகளில் ஒருங்கிணைப்பாளர் நல்லியப்பன் தலைமையில் நடைபெற்றது.
மேலும் கண்காட்சியில் விவசாய இடுபொருட்கள், நெல் விதைகள், பண்ணை உபகரணங்கள், பால் பண்ணையில் பயன்படுத்தக்கூடிய புதிய தொழில்நுட்பங்கள், கால்நடை தீவனங்கள், ஏறு தழுவ பயன்படும் டிராக்டர், கலப்பை உள்ளிட்ட கருவிகள் கண்காட்சியில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.
கண்காட்சியில் கல்லூரி மாணவர்கள், விவசாயிகள், பொதுமக்கள் என 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.