ஒட்டன்சத்திரம் அருகே மலைவாழ் மக்களுக்கு திமுக சார்பில் ஞாயிற்றுக்கிழமை நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டது.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக தலைமை கழகம் சார்பில் உப்பு, அரிசி, பருப்பு, சீனி, போர்வை போன்ற நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒட்டன்சத்திரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட வடகாடு ஊராட்சி சிறுவாட்டுக்காடு மலைப்பகுதியில் வாழும் மக்களுக்கு திண்டுக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், ஒட்டன்சத்திரம் சட்டப்பேரவை உறுப்பினருமான அர.சக்கரபாணி நிவாரணப் பொருள்கள் வழங்கினார்.
இதில் 170 குடும்பங்களுக்கு நிவாரண பொருள்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஒட்டன்சத்திரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் தி.தர்மராஜன், ஒன்றிய துணைச் செயலாளர் பு.சிவக்குமார், வடகாடு ஊராட்சி செயலாளர் ப.செல்வராஜ், க.சோமசுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.