திண்டுக்கல்

பழனியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பதாகையுடன் ஐயப்பப் பக்தர்கள் தரிசனம்

DIN

ஒட்டன்சத்திரம் அருகே மலைவாழ் மக்களுக்கு திமுக சார்பில் ஞாயிற்றுக்கிழமை நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டது.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக தலைமை கழகம் சார்பில் உப்பு, அரிசி, பருப்பு, சீனி, போர்வை போன்ற நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒட்டன்சத்திரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட வடகாடு ஊராட்சி சிறுவாட்டுக்காடு மலைப்பகுதியில் வாழும் மக்களுக்கு திண்டுக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், ஒட்டன்சத்திரம் சட்டப்பேரவை உறுப்பினருமான அர.சக்கரபாணி நிவாரணப் பொருள்கள் வழங்கினார். 
இதில் 170 குடும்பங்களுக்கு நிவாரண பொருள்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஒட்டன்சத்திரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் தி.தர்மராஜன், ஒன்றிய துணைச் செயலாளர் பு.சிவக்குமார், வடகாடு ஊராட்சி செயலாளர் ப.செல்வராஜ், க.சோமசுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துறையூர் அருகே இரட்டைக் கொலை: சிறு தகவல் கொடுத்தாலும் சன்மானம்

புதிய உச்சம்: தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்வு

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

SCROLL FOR NEXT