இளைஞர் கொலை: உறவினர் கைது

திருப்பூரில் முன் விரோதம் காரணமாக இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது உறவினரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். 

திருப்பூரில் முன் விரோதம் காரணமாக இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது உறவினரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். 
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டம், தேவதானப்பட்டியைச் சேர்ந்தவர் பி.முருகன் (20). இவரது நண்பர் ஆறுமுகம் (22). இவர்கள் இருவரும் திருப்பூர் வசந்தம் நகரில் வாடகைக்கு அறை எடுத்துத் தங்கியிருந்தனர். மேலும், அதே பகுதியில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். இந்நிலையில், வசந்தம் நகரில் உள்ள வேறு ஒரு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் முருகன் சடலம் கிடந்துள்ளார்.
இதுகுறித்து திருப்பூர் வடக்கு காவல் துறையினர் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், நிலக்கோட்டை வட்டம், சிலுக்குவார்பட்டியைச் சேர்ந்த ஈ.வீரமணிகண்டன் என்கிற சசிகுமார் (22) இந்தக் கொலையை செய்தது தெரியவந்தது.   
இதுகுறித்து காவல் துறையினர் கூறியதாவது: முருகன், வீரமணிகண்டன் ஆகிய இருவரும் உறவினர்கள். சிலுக்குவார்பட்டியில் இவர்கள் இருவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன் தகராறு ஏற்பட்டுள்ளது.  அப்போது முருகன் மற்றும் சிலர், சசிகுமாரைத் தாக்கியுள்ளனர்.இதனால் ஆத்திரமடைந்த சசிகுமார், அவரைக் கொலை செய்யத் திட்டம் தீட்டியுள்ளார். 
கடந்த 4 நாள்களுக்கு முன் திருப்பூர் வந்த சசிகுமார், முருகனை மது அருந்த அழைத்துள்ளார். பின்னர் ஏற்பட்ட தகராறில் கத்தியால் முருகனைக் குத்திக் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது என்றனர். 
இதையடுத்து, கைது செய்யப்பட்ட சசிகுமார்,  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com